திரையுலகில் நடிகர் நடிகைகள் மீது தொடர்ந்து புகார்கள் வந்தால் அவர்கள் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு ரெட் கார்ட் போடுவது வழக்கமாக உள்ளது. அவ்வகையில் தயாரிப்பாளர்கள் சங்கம் சில பிரபலங்கள் மீது இந்த ரெட் கார்ட் முறையை பயன்படுத்த உள்ளது. படம் நடிப்பதற்கு அட்வான்ஸ் வாங்கி விட்டு ஒரு நாள் கூட படப்பிடிப்புக்கு வராமல் இருப்பதாக புகார் வந்ததையடுத்து சிம்பு, விஷால், யோகி பாபு, SJ  சூர்யா, அதர்வா, தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோருக்கு ரெட் கார்ட் போட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று படப்பிடிப்பிற்கு வரும்போது தங்களுடன் அதிக அளவு பவுன்சர்களை அழைத்து வந்து விட்டு அவர்களுக்கும் சேர்த்து சம்பளம் கேட்பதாக புகார் எழுந்ததை எடுத்து அமலா பாலுக்கும் லட்சுமி ராய்க்கும் ரெட் கார்ட் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.