கேரள பெண்களை கட்டாயமாக மதமாற்றம் செய்து ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்த்து விடுவதாக உள்ள கதை களத்தில் தயாராகியுள்ளது தி கேரளா ஸ்டோரி திரைப்படம். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பழமொழிகளிலும் வெளியானது. இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி படக்குழுவை சேர்ந்த ஒருவருக்கு “தனியே வெளியே வர வேண்டாம்” என மிரட்டல் விடுக்கும் வகையில் குறுஞ்செய்தி ஒன்று வந்ததாக படத்தின் இயக்குநர் சுதிப்தோ சென் கூறினார். இதனையடுத்து, படக்குழுவினர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளித்துள்ளது