
அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பு வாதத்தை தொடர்ந்து இபிஎஸ் தரப்பு வாதம் நடைபெற்றது.
அதாவது, தனக்கென ஓபிஎஸ் தனிக்கட்சி நடத்தி வருவதாகவும் தங்களை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. அதோடு பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.