தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலத்தின் பக்கவாட்டு சுவர் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இணைப்பு சாலையில் முதல்வரின் கான்வாய் போக முடியுமா? என அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.

தற்போது பக்கவாட்டு சுவரை சீரமைக்கும் பணியில் தனியார் ஒப்பந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. பாலத்தின் தரம் பற்றி ஆய்வு மேற்கொண்டு  முழுமையாக பாலத்தை சீரமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டு சுவர் இடிந்த இடத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.