பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று அன்புமணி ராமதாஸ் பாமக முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதற்கிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சியில் இருந்து பொருளாளரான திலகபாமாவை நீக்குவதாக அறிவித்தார்.

அதிலிருந்து ஒரு சில நிமிடங்களிலேயே பாமக பொருளாளராக திலகபாமா நீடிப்பார் என அன்புமணி ராமதாஸ் அறிவித்தார். மேலும் கட்சியின் தலைவராகிய தனக்கு தான் முழு அதிகாரமும் உள்ளது என் அன்புமணி கூறினார்.

தற்பொழுது தைலபுரத்தில் இருந்து இரண்டாவது நாளாக பாமக நிறுவனர் ராமதாஸ் முக்கிய நிர்வாகிகளை நீக்கி அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். மறுபுறம் அன்புமணி ராமதாஸ் இரண்டாவது நாளாக மாவட்ட செயலாளர் அவர்களை சந்தித்து பேசி வருகிறார். இதனால் பரபரப்பு நிலவுகிறது.

2-ஆம் நாள் ஆலோசனை கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக நிறுவனர் ராமதாசை புகழ்ந்து பேசி உள்ளார். ஐயா நம்முடைய குலதெய்வம். அவர் நமது கொள்கை வழிகாட்டி. தொலைநோக்கு சிந்தனையாளர் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

அதிக உறுப்பினர்களை சேர்த்தால் தங்க மோதிரமோ தங்க சங்கிலியோ தரமாட்டேன். உண்மையான உறுப்பினர்களை மட்டும் சேர்த்தால் போதும். கடந்த காலங்களில் நிறைய அனுபவித்து விட்டேன். புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிற்கு தொடர்பு கொண்டால் பிகாருக்கு அழைப்பு போகிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேதனையுடன் பேசி உள்ளார்.