
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 5,645 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது இருபது ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 665 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நேற்று 45 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம் இன்று 45 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து சரிந்த நிலையில் மீண்டும் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு தொடரலாம் என அதை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.