கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் மதுசூதனபுரம் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள பெண்கள் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பின்னர் இரண்டாவது முறையாகவும் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை. தமிழக அரசு அறிவித்த அனைத்து தகுதிகள் இருந்த போதிலும் மகளிர் உரிமை தொகை வழங்க மறுப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தகுதியுள்ள பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய குழு தலைவர் மிக்கேல் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் உட்பட பலர் பங்கேற்றனர்.