ஒரு ஆசிரியர் தனது மாணவன் வாழ்க்கையில் பெரிய வெற்றியை அடைவதைக் காண்பதே அவரது வாழ்க்கையின் மிகச்சிறந்த மற்றும் பெருமைக்குரிய தருணமாகும். அந்த வகையில், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு ஆசிரியை ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் தான் பாடம் நடத்திய பழைய மாணவனை எதிர்பாராதவிதமாகச் சந்திக்கிறார்.

மேலும் அப்போது அந்த மாணவன் இந்திய ராணுவத்தின் சீருடையில் கம்பீரமாக இருப்பதைப் பார்த்து, ஆசிரியை சொல்லொணா பெருமிதத்துடனும் மகிழ்ச்சியுடனும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விடுகிறார். “இது நான் பாடம் சொல்லிக்கொடுத்த மாணவன்” என்று பெருமையுடன் கூறும் அந்த ஆசிரியையின் நெகிழ்ச்சியான தருணம் பார்ப்பவர்களின் இதயங்களைத் தொட்டுள்ளது.

“>

இந்த உணர்வுபூர்வமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான இணையவாசிகள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து ஆசிரியரின் பங்களிப்பைப் பாராட்டி வருகின்றனர். “ஆசிரியர்களே உண்மையான தேசத்தை உருவாக்குபவர்கள்” என்றும், “குரு-சீடர் உறவுக்கு இதைவிட ஒரு அழகான உதாரணம் இருக்க முடியாது” என்றும் பலரும் நெகிழ்ச்சியுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ராணுவ உடையில் இருக்கும் தனது மாணவனைப் பார்த்து ஆசிரியை உணர்ச்சிவசப்படும் இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் தற்பொழுது பெரும் வரவேற்பைப் பெற்று அனைவரின் கண்களையும் குளிரச் செய்துள்ளது