ரோகித் சர்மா இனி சர்வதேச 20 ஓவர் போட்டியில் இருந்து முழுமையாக ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளார். தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கருடன் கலந்து ஆலோசித்த பிறகு அவர் இந்த முடிவு எடுத்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறுகின்றன. இளம் வீரர்கள் தொடர்ந்து சொதப்பினால், தேர்வாளர்கள், பிசிசிஐ, ரோகித் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும்படி கேட்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.