ஐபிஎல் 2024 போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டிகள் முடிவடைந்த பிறகு வருகின்ற ஜூன் மாதம் 1  ஆம் தேதி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க இருக்கிறது. இந்த உலகக் கோப்பை போட்டியில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு வருகின்ற 28-ஆம் தேதி நடைபெற இருப்பதாக ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி வருகின்ற 27-ஆம் தேதி டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டிகள் நடைபெற்ற பிறகு மறுநாள் அதாவது 28 ஆம் தேதி உலகக்கோப்பை தொடருக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் உலகக்கோப்பை தொடரில் கலந்து கொள்ளும் வீரர்களை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்கள் சேர்ந்து தேர்வு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.