தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்திற்கு 5 உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.பி சிவனருள், முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி ஆர் சரவணகுமார், சென்னையை சேர்ந்த மருத்துவர் ஏ.தவமணி, திருவல்லிக்கேணியை சேர்ந்த உஷா சுகுமார், கோவை ஸ்ரீ நாராயண குரு மேலாண்மை கல்வி நிறுவன முதல்வர் முனைவர் ஆர். பிரேம்குமார் ஆகிய 5 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.