+2 பொதுத்தேர்வில் 600/600 மார்க் எடுத்த மாணவி தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.  அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி சாதனை படைத்துள்ளார். பானு பிரியா-சரவணக்குமார் தம்பதியின் மகளான அண்ணாமலையார் பள்ளி மாணவி நந்தினி, தேர்வில் அனைத்து பாடங்களிலும் சென்டம் எடுத்து 600க்-கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு முதல்வர் உள்ளிட்ட பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவரை கவுரவிக்கும் விதமாக தனியார் தொலைக்காட்சி அழைத்து கவுரவித்துள்ளது. பேட்டியளித்த மாணவி, நான் ட்யூஷன் எல்லாம் செல்லவில்லை, வீட்டிலேயே படித்தேன். மனப்பாடம் செய்தால் மறந்துவிடும். புரிந்து படித்தாலே நினைவில் இருக்கும். வறுமையை காட்டிலும் மனதின் லட்சியமும், உறுதியுமே என்னை வெற்றிபெற வைத்தது என்றார்.