மதுக்கரை ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மே 11ஆம் தேதி முதல் மே 17ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கோவையிலிருந்து தினம் தோறும் பாலக்காடுக்கு மாலை 6 மணிக்கு மெமு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரயில் நாளை முதல் மே 17ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதனைப் போலவே கேரள மாநிலம் சோரனூரில் இருந்து கோவைக்கு காலை 8.20 மணிக்கு செல்லும் விரைவு ரயில் நாளை முதல் மே 17ஆம் தேதி வரை பாலக்காடு நிலையத்துடன் நிறுத்தப்படும்.

ஈரோட்டில் இருந்து பாலக்காடு செல்லும் விரைவு ரயில் நாளை முதல் மே 17ஆம் தேதி வரை பாலக்காட்டுடன் நிறுத்தப்படும். மங்களூரில் இருந்து கோவை செல்லும் விரைவு ரயில் நாளை முதல் மே 17ஆம் தேதி வரை பாலக்காட்டுடன் நிறுத்தப்படும். அதனைப் போலவே சோரனூர் மற்றும் மங்களூரில் இருந்து கோவை செல்லும் விரைவு ரயில்கள் நாளை முதல் மே 17ஆம் தேதி வரை பாலக்காட்டுடன் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.