சென்னை மெட்ரோ ரயிலில் தினந்தோறும் ஏராளமானவர்கள் பயணம் செய்து வருகிறார்கள். இந்நினையில் மெட்ரோ நிறுவனம் அதன் நிறுவன நாளை கொண்டாடும் வகையில் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 3 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), பேடிஎம், வாட்ஸ்அப் அல்லது ஃபோன்பே ஆகியவற்றைப் பயன்படுத்தி, ஒற்றை பயண இ-க்யூஆர் பயனச் சீட்டுகளை வாங்கும் பயணிகளுக்கு, ரூ.5 என்ற பயணக் கட்டண சலுகையை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆனால் சிங்கார சென்னை அட்டை, மெட்ரோ பயண அட்டை, சிஎம்ஆர்எல் மொபைல் ஆப் ஸ்டோர் வேல்யூ பாஸ் மற்றும் காகித க்யூஆர் ஆகிய பயணச் சீட்டுகளுக்கு இச்சலுகை பொருந்தாது.