தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆறு நாட்களாக சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் உடல்நிலை நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மேலும் சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளால் அவதி அடைந்த நிலையில் தற்போது மூச்சு விடுவதில் எந்த சிரமமும் இல்லை, அவர் தானாகவே சுவாசிக்கிறார். சிகிச்சை முடிந்து இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களில் அவர் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.