2023 உலகக் கோப்பை போட்டிக்கான டிக்கெட்டுகளை யாரும் கேட்க வேண்டாம் என விராட் கோலி கேட்டுக்கொண்டுள்ளார்.

2023 ஒருநாள் உலகக் கோப்பை  இன்று முதல் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து போட்டியுடன் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக, கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு சிறப்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த ஸ்டோரிக்கு அவரது மனைவி மற்றும் நடிகை அனுஷ்கா சர்மாவும்ரியாக்ஷன் கொடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக அனுஷ்கா இரண்டாவது கர்ப்பம் குறித்து செய்திகளில் இருந்து வருகிறார். விராட்டும் அனுஷ்காவும் மீண்டும் பெற்றோராகப் போகிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், இருவரிடமிருந்தும் இதுவரை எந்த பதிலும் வரவில்லை. 

 உலகக் கோப்பை இன்று தொடங்குவற்கு முன்பு, விராட் கோலி இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஒரு சிறப்பு கோரிக்கையை விடுத்தார். உலகக் கோப்பை போட்டிக்கான டிக்கெட்டுகளை யாரும் கேட்க வேண்டாம் என இந்தப் பதிவின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், ‘உலகக் கோப்பை நெருங்கி வருவதால், முழுப் போட்டியிலும் என்னிடம் டிக்கெட் கேட்க வேண்டாம் என்று எனது நண்பர்கள் அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த போட்டியை உங்கள் வீட்டிலிருந்து கண்டு மகிழுங்கள்.’ இதனுடன், அவர் சிரித்த எமோஜியையும் பதிவிட்டுள்ளார்.

விராட்டின் இந்தப் பதிவைப் பகிர்ந்து கொண்ட அனுஷ்கா,  நானும் இதில் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். உங்கள் செய்திகளுக்கு பதிலளிக்கப்படாவிட்டால், தயவுசெய்து என்னிடம் உதவி கேட்க வேண்டாம். நீங்கள் புரிந்து கொண்டதற்கு நன்றி.’என குறிப்பிட்டு கூப்பிய கைகள் மற்றும் இதயம் கொண்ட எமோஜியை பதிவிட்டுள்ளார். அனுஷ்கா மற்றும் விராட்டின் இந்த பதிவிலிருந்து, அவர்களின் நண்பர்கள் கிரிக்கெட் போட்டி டிக்கெட்டுகளை அடிக்கடி கேட்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால் தான் விரக்தியில் நேரடியாக சமூக வலைதளங்களில் இந்தப் பதிவை எழுதியுள்ளார் விராட் கோலி.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை இன்று முதல் தொடங்குகிறது. இந்த உலகக் கோப்பை நவம்பர் 19-ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்தியா மட்டும்  உலகக் கோப்பை முழுவதையும் தனியாக நடத்துவது இதுவே முதல் முறை. இந்த 2023 உலகக் கோப்பையில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும். அதில், அக்டோபர் 14-ம் தேதி நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியின் மீதே அனைவரின் கவனமும் உள்ளது.