தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மாநில நீதித்துறை சேவையில் காலியாக உள்ள சுமார் 245 சிவில் நீதி பணியிடங்களுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. அதற்கான விண்ணப்ப செயல்முறை கடந்த ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவு பெற்ற நிலையில் இந்த பணிக்கு மாதம் 27 ஆயிரத்து 700 முதல் 44 ஆயிரத்து 770 வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் சிவில் நீதிபதி பணிக்கான முதல் கட்ட தேர்வு ஆகஸ்ட் 19ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் சிவில் நீதிபதி முதல் கட்ட தேர்வுக்கான நுழைவுச்சீட்டை வெளியிட்டுள்ளது. இதனை tnpsc யின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திலிருந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.