நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை விற்கக்கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்ட்டு தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தவுடன் மது விற்பனையை தேர்தல் ஆணையம் கண்காணிக்கும்.

கடையின் சராசரி விற்பனை 30 சதவீதத்துக்கு மேற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மதுபானங்களை மொத்தமாக விற்கக்கூடாது, ஒரு நபருக்கு 4 குவாட்டருக்கு மேல் விற்கக்கூடாது உள்ளிட்ட நெறிமுறைகளை பின்பற்றவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.