நிதி சுமை காரணமாக டாஸ்மாக் மதுபானங்களின் விலை குவாட்டருக்கு பத்து ரூபாய் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 829 மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா உள்ளிட்ட மதுபானங்களின் விலை குவாட்டர் பாட்டிலுக்கு பத்து ரூபாய் விரைவில் உயர்த்தப்பட உள்ளது. அதற்கேற்ப ஆஃப் பாட்டில் மற்றும் முழு பாட்டில் விளையும் 30 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விலை உயர்வு வாய்ப்புள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.