
ஜெய்ப்பூரில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம், தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு இளைஞன் பாம்பு கடித்ததும், அதை தனது பையில் பூட்டி வைத்துக்கொண்டு, நேராக ராஜஸ்தான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் (RUHS) அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சென்றுள்ளார்.
இந்த சம்பவம் மூன்று நாட்களுக்கு முன்னதாக நடந்ததாகக் கூறப்படுகிறதென்றாலும், தற்போது தான் சமூக வலைதளங்களில் இது வெளிவந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை முன் அந்த இளைஞன் பையை திறந்தவுடன், அதிலிருந்து ஒரு பெரிய பாம்பு வெளியே வந்ததால், அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பீதி அடைந்தனர். பாம்பைக் கண்டு மக்கள் அலறியடித்து ஓடினர். பிறகு, அந்த இளைஞன் “இந்த பாம்பே என்னை கடித்தது” என்றும், “இது விஷமா இல்லையா என்பதைச் சொல்லுங்கள்” என்றும் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
जयपुर: RUHS अस्पताल का रोचक वाकया. जिस सांप ने डसा उसी को अस्पताल की इमरजेंसी में लेकर पहुंचा युवक.#Jaipur #Snake #HindiNews #sachbedhadakdaily #snakebites pic.twitter.com/0TApkV0CBJ
— Sach Bedhadak Daily (@SachBedhadakD) June 25, 2025
“>
அந்த இளைஞன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, பாம்பைப் பையில் பூட்டி மருத்துவமனைக்கு கொண்டு வந்த இந்த நுணுக்கமான சம்பவம் மருத்துவமனை ஊழியர்களிடமும், சமூக ஊடகங்களிலும் வலுக்கட்டாய விவாதங்களை தூண்டியுள்ளது. இதன் பின்னணியில் என்ன காரணம், பாம்பு எவ்விதமானது, இளைஞனின் நிலைமை எப்படி எனும் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.