உ.பி., வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகத்தில் ‘மருந்தியல்’ பயின்ற 4 முன்னாள் மாணவர்கள், முதலாமாண்டு தேர்வில் ‘ஜெய்ஸ்ரீ ராம்’ என எழுதி தேர்ச்சி பெற்றதாக புகார் கிடைத்தது. தொடர்ந்து மாணவர்களின் விடைத்தாள் நகல்களை எடுத்துப் பார்த்தபோது ஜெய்ஸ்ரீராம் எனவும், ரோஹித், விராட் என கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை எழுதி பக்கங்களை நிரப்பியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பணம் பெற்றுக்கொண்டு 56% மதிப்பெண் போட்டு இவர்களை பாஸ் செய்த 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.