ஊழல் வழக்கில் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவர் ஜெயலலிதா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இந்த கருத்துக்கு அதிமுக கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதா மீது நான் மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளேன், ஒரு பெண்ணாக அவர் திமுகவை எதிர்கொண்டு வளர்ந்து வந்த விதம் குறித்து பலமுறை நான் பேசியுள்ளேன், அவருடைய பெயரை எங்குமே நான் குறிப்பிடவில்லை,நான் பேசியது தவறாக திரித்து கூறப்பட்டுள்ளது என்று அண்ணாமலை தற்போது விளக்கம் அளித்துள்ளார்.