அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்திருந்த நிலையில் தற்போது செல்லூர் ராஜு அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, இந்த ரகுபதி யார்.? ஜெயலலிதா மட்டும் கை காட்டவில்லை எனில் அதிமுக தொண்டர்கள் வியர்வையும், ரத்தமும் சிந்தி உழைக்கவில்லை எனில் இவர் எங்கு இருந்திருப்பார்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில் பெண்களின் பாதுகாப்பு என்பது அதள பாதாளத்தில் இருக்கிறது. போதைப் பொருட்கள் புழக்கமும் அமோகமாக நடைபெறுகிறது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடுநிலையான விசாரணைக்காக அதனை சிபிஐக்கு மாற்றியவர் எடப்பாடி பழனிச்சாமி.

ஆனால் அண்ணா பல்கலைக்கழக வழக்கில் ஞானசேகரனுக்கும் திமுகவுக்கும் சம்பந்தமே கிடையாது என பச்சை பொய் பேசியவர் இந்த ரகுபதி. கோடநாடு வழக்கை விரைவில் முடியுங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறும் நிலையில் நான்கு வருடங்களாகியும் எதற்காக முடிக்கவில்லை. இதற்கு அமைச்சர் ரகுபதியால் பதில் சொல்ல முடியுமா. அவர்கள் முயற்சி செய்தும் கிடைக்காத நிதி எடப்பாடி பழனிச்சாமி அமித்சாவை சந்தித்ததால் கிடைத்துள்ளது.

இதனால் அவர்களுக்கு கடுப்பு இருக்கத்தான் செய்யும். அமைச்சர் ரகுபதி உள்ளிட்டவர்கள் தான் சோதனைக்கு பயப்படலாம். ஆனால் மக்களோடு மக்களாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு மடியில் கனமில்லை அதனால் வழியிலும் பயமில்லை. நாங்கள் யாரும் சோதனைக்கு இதுவரை பயப்பட்டது கிடையாது. மேலும் இணையும் அஞ்சப் போவது கிடையாது என்று கூறியுள்ளார்.