பீகார் மாநிலத்தை சேர்ந்த தம்பதி தங்களின் ஐந்து வயது மகளுடன் கேரள மாநிலம் அலாவூர் மாவட்டத்தில் கடந்த நான்கு வருடங்களாக வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இவர்களது மகள் திடீரென மாயமாகி உள்ளார். இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் பீகாரை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ஆசப் என்பவர் சிறுமியை அழைத்துச் செல்வது பதிவாகியுள்ளது.

இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு காவல்துறையினரால் ஆசப் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் மது போதையில் இருந்ததால் அவரிடம் விசாரணை மேற்கொள்ள முடியவில்லை. என் நிலையில் நேற்று மது போதை தெளிந்த ஆசப்பிடம் விசாரித்ததில் அவர் சிறுமியை ஜூஸ் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவர் கூறிய இடத்திற்கு சென்று அங்கே குப்பை கிடங்கில் தேடிய போது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. சிறுமியின் பிரேத பரிசோதனை முடிவில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது.