அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திரங்கள் குறித்த ஆவணங்களை சமர்பிக்க கால அவகாசம் கோரியது SBI வங்கி. மார்ச் 6ம் தேதிக்குள் எந்தெந்த கட்சிகள் யாரிடம் இருந்து தேர்தல் பத்திரங்களை வாங்கியது என்ற ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் SBI ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த ஆவணங்களை சமர்பிக்க ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என SBI வங்கி சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது.