நாடு முழுவதும் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி மாலை 6.30 மணி உடன் முடியும் வரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஜூன் 1 மாலை 6.30 மணிக்கு பிறகு கருத்துக்கணிப்புகள் வெளியாகும்.