ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். அதாவது கதுவா மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் 5 தீவிரவாதிகள் ஊடுருவியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ராணுவத்தினர் அங்கு சென்றனர்.

அவர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில்தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் நடந்த பயங்கர சண்டையில் மூன்று ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.