ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் தற்போது முழு நாட்டையே திணற வைத்துள்ளது.

மாநில ஊரக வளர்ச்சி துறையில் தலைமைப் பொறியாளராக பணியாற்றும் பைகுந்த நாத் சாரங்கி, தனது வருமானத்தை விட அதிகமாக சொத்துகள் வைத்திருப்பதாக எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கிடையே, அவரது குடியிருப்புகளில் நடந்த விசாரணையில் ரூ.2.1 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சோதனைகள் அங்குல், புவனேஸ்வர் மற்றும் பூரி ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது. புவனேஸ்வரில் உள்ள டும்டுமா பகுதியில் உள்ள அவரது பிளாட்டில், விஜிலென்ஸ் அதிகாரிகள் அங்கு வந்த போது, அவர் ஜன்னல் வழியாக ரூ.500 நோட்டுகளின் கட்டுகளை வெளியே வீசியதும், அந்த பணம் சாலையில் வீழ்ந்ததும் பண மழையைப் போல் பரவியது. அதனை பக்கத்து குடியிருப்பவர்கள் நேரில் பார்த்து, அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, அந்த பண மூட்டைகள் மீட்கப்பட்டன.

மொத்தம் 7 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது:

அங்குல் – இரட்டை மாடி வீடு

புவனேஸ்வர் – டும்டுமா பிளாட்

பூரி – தனி பிளாட்

உறவினர் வீடு – சிக்ஷ்யகாபாடா

தந்தைவழி வீடு – அங்குல்

அலுவலக அறை

தந்தையர் வீடு (2 வது ) – அங்குல்

இந்த சோதனையில் ரூ.1.1 கோடி அங்குலில் உள்ள வீட்டில் மற்றும் ரூ.1 கோடி புவனேஸ்வர் குடியிருப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து 8 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 12 ஆய்வாளர்கள், 6 உதவி ஆய்வாளர்கள் உட்பட மொத்தம் 26 அதிகாரிகள் கொண்ட குழு விசாரணையில் ஈடுபட்டது. விசாரணை வீடியோவில், அதிகாரிகள் ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50 நோட்டுகளின் கட்டுகளை எண்ணும் காட்சிகள் தெளிவாக காணப்படுகின்றன.

இதுவரை மீட்கப்பட்ட பண தொகை ரூ.2.1 கோடி என தெரிவித்துள்ள லஞ்ச ஒழிப்பு துறை, பணம் எண்ணும் பணி இன்னும் தொடர்வதாகவும், சாரங்கிக்கு எதிரான வழக்குகள் சட்டப்படி தொடரப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம், அரசு அதிகாரிகளில் ஊழல் குறித்து மீண்டும் பல கேள்விகளை எழுப்பி, பொதுமக்களில் அதிர்ச்சி மற்றும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.