
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பேரிழப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் கேப்டன் விஜயகாந்த் உடல் அவரது தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது உடலுக்கு பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அவரின் நினைவிடம் தினமும் மலர்களால் அலங்கரிக்கப்படும். அதன்படி நேற்று அவரது நினைவிடம் சொர்க்கவாசல் போன்று அலங்கரிக்கப்பட்டுள்ளது. இங்கு வருவது ஒரு கோவிலுக்கு போன்ற மனநிலையை கொடுப்பதாக பொதுமக்களும் கூறி வருகிறார்கள்.