
தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் 5% தள்ளுபடி உடன் சொத்து வரி செலுத்துவதற்கு இன்று கடைசி நாளாகும். புதிய விதிகளின்படி ஒரு நிதியாண்டில் முதல் அரையாண்டு நிதியை ஏப்ரல் 30, இரண்டாவது அரையாண்டு நிதியை அக்டோபர் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அதன்படி இன்றைக்குள் வரியை செலுத்தினால் அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும். தாமதமாக வரி செலுத்தினால் மாதம் ஒரு சதவீதம் தனி வட்டி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.