உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காஜியாபாத்தில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. அங்கு வைத்து ஒருவர் தனது காதலியை சரமாரியாக தாக்கியுள்ளார். பைக்கில் பெட்ரோல் நிரப்பும்போது காதலர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் கோபமான காதலன் தனது காதலியை கொடூரமாக தாக்கியுள்ளார்.

அவர் அந்த பெண்ணை குத்துவது, உதைப்பது என மூர்க்கத்தனமான செயலில் ஈடுபட்ட காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பெட்ரோல் நிரப்பும்போது அந்த பெண்ணுக்கு வேறு ஒரு நபரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதன் பிறகு தான் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.