மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற்ற ‘சத்ரோ கி கூஞ்ச்’  என்ற பெண்கள் தொடர்பான பிரத்யேக பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது அங்குத் திரண்டிருந்த இளம் பெண்களுடன் அவர் உற்சாகமாகச் புகைப்படம் எடுத்துக் கொண்டும், உரையாடிக் கொண்டும் இருந்த தருணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு இளம் பெண் மேடை மீதே அவரிடம் நெருங்கிச் சென்று கன்னத்தில் முத்தமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 38 விநாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோ கிளிப்பில், ராகுல் காந்தியைச் சுற்றி வளைத்துக்கொண்டு இளைஞர்களும் பெண்களும் செல்ஃபி எடுப்பதும், ஆரவாரம் செய்வதும் பதிவாகியுள்ளது. கூட்டத்தின் நடுவே அந்தப் பெண் திடீரென ராகுல் காந்தியின் கன்னத்தில் முத்தமிட்டதை அடுத்து, அங்கிருந்த பாதுகாவலர்களின் பாதுகாப்போடு அவர் புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்து செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது காட்டுத் தீ போல பரவி வருவதுடன், பலரும் இதனைப் பற்றித் தீவிரமாக விவாதித்து வருகின்றனர். ராகுல் காந்தியின் பொதுக்கூட்டங்களில் இதுபோன்ற எதிர்பாராத மற்றும் உணர்ச்சிகரமான ரசிகர்களின் சந்திப்புகள் அவ்வப்போது வைரலாவது குறிப்பிடத்தக்கது.