தனியார் செய்தி தொலைக்காட்சி ஊழியர் சங்கரின் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இளம் வயதில் சங்கரை இழந்த அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், ரூ.5 லட்சம் நிதி வழங்கவும் ஆணையிட்டுள்ளார். மேலும், படுகாயமடைந்த மூவருக்கு தலா ரூ.50,000 மற்றும் உயர் மருத்துவ சிகிச்சை வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டார்.

சந்திரயான்-3 தொடர்பான செய்தி சேகரிப்பு பணிக்காக நேற்று காலை நெல்லையில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு தனியார் தொலைக்காட்சி செய்தி குழுவினர். காரில் சென்றுள்ளனர். பணியை முடித்துக் கொண்டு இரவு நெல்லை திரும்பும் போது நாங்குநேரி டோல்கேட் அருகில் அவர்கள் பயணித்த கார் விபத்தில் சிக்கி உள்ளது. இந்த விபத்தில் செய்தி ஒளிப்பதிவாளர் சங்கர் உயிரிழந்தார்.