இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் ரில்ஸ் வீடியோக்கள் வெளியிடுவது அதிகரித்து வரும் நிலையில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஏன் பள்ளி கல்லூரி மாணவர்கள் வரை பலரது மத்தியிலும் ரீல்ஸ் மோகம் அதிகமாக இருக்கிறது. இப்படி ரீல்ஸ் வீடியோ மூலம் இளைஞர்கள் சில நேரங்களில் விபரீதமான செயல்களிலும் ஈடுபடுவதால் உயிரிழப்புகள் கூட ஏற்படுகிறது. இது போன்ற செய்திகள் சமீப காலமாக வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் பஸ் ஸ்டாண்டில் வைத்து வாலிபர் ஒருவர் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோக்கள் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

அதாவது அவர் திருச்சியில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்தில் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அந்த வாலிபர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து தற்போது பள்ளி மாணவிகள் இருவர் பேருந்தை வழிமறித்து ஏறுவது போல் சைகை காட்டி ஏமாற்றிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். மேலும் இது தொடர்பான ரீல்ஸ் வீடியோவை அவர்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள்.