தெலுங்கானா மாநிலத்தில் யாதாகுரி குட்டா நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சிறுவன் ஒருவன் தன் தாயாருடன் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளான். அப்போது வரிசையில் காத்திருந்தபோது சிறுவன் விளையாட்டுத்தனமாக நடந்து கொண்டதால் அங்கிருந்த கம்பிகளுக்கிடையில் சிறுவனின் தலைசிக்கி கொண்டது.

பின்னர் கோவில் ஊழியர்கள் உள்ளிட்டோர் அங்கு வந்தனர். அவர்கள் சுமார் அரை மணி நேரமாக போராடி எப்படியோ அந்த சிறுவனை ஆபத்து இல்லாமல் கம்பிகளுக்கு இடையிலிருந்து வெளியே மீட்டனர். மேலும் இது தொடர்பான வீடியோஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.