
தலைநகரான சென்னையில் கூட்ட நெரிசல் எப்போதும் அதிகமாக இருக்கும் என்பதால் மக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் சவுகரியமாக பயணம் செய்கின்றனர். இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயிலில் சைக்கிள்கள் மற்றும் செல்ல பிராணிகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு மெட்ரோவில் சைக்கிள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது.
ஆனால் கொரோனாவுக்கு பிறகு மெட்ரோவில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் அதற்கு அனுமதி தற்போது மறுக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே சமைக்கப்படாத இறைச்சி,மீன்கள் மற்றும் செல்லப்பிராணிகளை எடுத்துச் செல்லவும் அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.