இந்தியாவில் உதான் திட்டத்தின் கீழ் சர்வதேச விமான நிலையங்கள் இருக்கும் நகரங்களை தவிர்த்து பிற விமான நிலையங்களில் இருந்து முக்கிய நகரங்களுக்கு அரசு தற்போது முடிவு செய்துள்ளது. 2018 ஆம் ஆண்டு சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை தொடங்கப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த விமான சேவை நிறுத்தப்பட்டது.

இந்த விமான சேவையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் சேலம் மற்றும் சென்னை இடையேயான விமான சேவை மீண்டும் தொடங்குவது தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.