சென்னை கேகே நகர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ரமேஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரில் வந்த இரண்டு நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இன்று அதிகாலை தேநீர் கடைக்கு சென்றபோது இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தகவல் அறியும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரமேஷின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. சமீபத்தில் குன்றத்தூர் அருகே விசிக வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.