பொதுவாக முக்கியமான விழாக்காலங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடுவது வழக்கம். அந்தவகையில் சென்னையில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருவள்ளுவர் தினமான ஜன.16, வடலூர் ராமலிங்கர் நினைவு தினமான ஜன.25, குடியரசு தினமான ஜன .26 ஆகிய 3 தினங்களும், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதை சார்ந்த பார்கள் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஜன-16, 25, 26 ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!
Related Posts
மாணவர்களே… கல்லூரியில் சேர்வதற்கு முன்பு இதை விசாரிங்க…. முக்கிய அறிவிப்பு…!!!
கல்லூரிகளில் சேர்வதற்கு முன்பு அவற்றின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் போன்றவை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என அண்ணா பல்கலை துணை வேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார். 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பொறியியல் படிக்க ஆர்வம் காட்டும்…
Read moreBREAKING: பூண்டு விலை கிடு கிடுவென உயர்ந்தது… இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…!!!
அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருளான பூண்டு விலை உயர்ந்து கொண்டே வருவது இல்ல தரிசிகளை கலக்கமடைய செய்துள்ளது. பத்து நாட்களுக்கு முன்பே கிலோ 100 முதல் 200 ரூபாய் வரை விற்பனையான பூண்டு தற்போது 160 முதல் 360 ரூபாயாக…
Read more