சென்னையில் ருத்ர தாண்டவம் ஆடிவரும் மிக்ஜாம் புயல் திருப்பதியையும் விட்டு வைக்கவில்லை. ஆந்திராவின் திருப்பதி மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் பல பகுதிகளில் புயல் தாக்கத்தால் பலத்த காற்று வீசுவதால் அங்கு நிலைமை மோசமாக உள்ளது. தமிழகத்தில் பெய்யும் மழையின் தாக்கம் நெல்லூர் மற்றும் திருப்பதியிலும் எதிரொளிக்கும். எனவே திருப்பதி பயணத்தை அடுத்த இரண்டு நாட்களுக்கு தள்ளி வைப்பது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.