சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நெஞ்சு வலியால் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் விசாரணை நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கண்ணதாசன், அமலாக்கத்துறை அதிகாரிகாளால் தான் கடுமையாக நடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தரதரவென இழுத்துச் சென்றதில் தலையில் காயம் ஏற்பட்டதாகவும் செந்தில் பாலாஜி கூறியதாக அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள் வெளியானதன் அடிப்படையில் மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரிப்பதாகவும் செந்தில் பாலாஜியிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.