தமிழகத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்க துறையால் கைதான செந்தில் பாலாஜி தற்போது உடல் நல குறைவால் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு நடந்தாலே மயக்கம் வருவதாக அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். மன அழுத்தத்தால் அவருக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தீவிரமாக அவரை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை டிசம்பர் 4ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.