அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி ரிஹானா கடந்த 2016 ஆம் ஆண்டு “சூரியனின் பாடல்” என்கிற ஆல்பம் மூலம் சர்வதேச அளவில் பிரபலம் அடைந்தார். மேலும் 250 மில்லியன் இசைத்தட்டுகளை விற்பனை செய்து உலக சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் 9 கிராமி விருதுகள் போன்ற பல்வேறு விருதுகளை பெற்று சாதனைகளை படைத்துள்ளார். 2016 ஆம் ஆண்டிற்கு பிறகு அவர் எந்தவித ஆல்பம் வெளியிடாமல் இசைத்துறையில் இருந்து விலகியே இருந்துள்ளார்.

இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு 34 வயதான ரிஹானா தனது இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்தபடி சூப்பர் பவுல் 57 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் அவர் உயர்ந்த கண்ணாடி மேடையில் 13 நிமிடங்களுக்கு தொடர்ந்து பாடல்களை பாடியும் நடனமாடியும் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால் இதுவே தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது. அதற்கு காரணம் அவர் குழந்தையை வயிற்றில் சுமந்தபடி மிதக்கும் கண்ணாடி மேடையில் ஆடி பாடியது பெரும் விவாதமாக்கப்பட்டுள்ளது.