மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், 2வது தவணை ஆகஸ்டு 1 முதல் நவம்பர் 30 வரையிலும், மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை வழங்கப்படுகிறது.

இதனிடையே மகாராஷ்டிரா அரசு விவசாயிகளுக்கு நற்செய்தியை வழங்கியுள்ளது. அதாவது ‘நமோ ஷேத்காரி’ என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு ரூ. 6000 பண உதவிக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல்வர் ஏக் நாத் ஷிண்டே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கிடையில், பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகளுக்கு கூடுதலாக வழங்கப்படும் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறினார். விவசாயிகளின் கணக்கில் விரைவில் பணம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.