தமிழகத்தில் சுபமுகூர்த்த தினங்களில் ஆவணப்பதிவுகள் அதிக அளவில் நடைபெறும் என்பதால் அன்றைய தினம் மட்டும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வினியோகம் செய்யப்படும். அந்த வகையில் இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் பதிவுத்துறை சார்பில் ஒரு முக்கிய அறிக்கை வெளிவந்துள்ளது. அதாவது ஆனி மாதத்தில் இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் கூடுதலாக பத்திரப்பதிவுகள் நடைபெறும்.

இதன் காரணமாக இன்று ஒரு சார் பதிவாளர் அலுவலகங்களில் 100-க்கு பதில் கூடுதலாக 150 டோக்கன்கள் வழங்கப்படும். அதன் பிறகு இரண்டு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 200க்கு பதில் 300 டோக்கன்கள் வழங்கப்படும்.

இந்நிலையில் அதிகமாக பத்திரப்பதிவு நடைபெறும் அலுவலகங்களில் 150 கூடுதல் டோக்கன்களோடு சேர்த்து 12 தட்கள் முன்பதிவு வில்லை மற்றும் கூடுதலாக 4 தட்கள் முன்பதிவு வில்லைகள் வழங்கப்படும். மேலும் இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.