பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்கவா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தாடிவாலா போலீஸ் நிறைய சரங்கத்திற்குட்பட்ட பகுதியில் லக்கி மார்வாட் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும் அவர்கள் அப்பாஸ் போலீஸ் சோதனை சாவடியை தாக்க திட்டமிட்டு உள்ளதாகவும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பெயரில் உள்ளூர் போலீசாரும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் இணைந்து லக்கி மார்வாட் பகுதிக்கு விரைந்துள்ளனர். அங்கு போலீசார் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர்.

இதனைக் கண்ட பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனால் போலீஸ் படையினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இருதரப்பிற்கும் இடையேயான மோதல் நீண்ட நேரமாக தொடர்ந்தது. இந்த மோதலில் 6 பயங்கரவாதிகள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் நான்கு பேர் பல்வேறு தாக்குதல்களில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்திலிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தலிபான் பயங்கரவாதிகளுக்கு பேரிடியாக அமைந்தது.