2024ஆம் வருடம் சுதந்திர தின விழாவில் வழங்கப்படும் அரசு விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சுதந்திர தின விழா அன்று சிறந்த சமூக சேவகர், சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன. சமூக சேவகருக்கு 50,000 ரூபாய், சான்று, தொண்டு நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் சான்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் 21ஆம் தேதி முதல் https ://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.