நாட்டின் 76 ஆவது சுதந்திர தின விழா வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெற உள்ள நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் டெல்லியில் சுதந்திர தினத்தன்று எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருப்பதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதிலும் குறிப்பாக ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் பாதுகாப்பு நலனை கருதி நாடு முழுவதும் இருந்து ரயில் மூலமாக டெல்லிக்கு பார்சல் அனுப்பும் வசதி வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை தடை செய்யப்பட்டுள்ளது. அது மட்டும் அல்லாமல் பிற ஊர்களுக்கு ரயில் வழியாக செல்லும் பார்சல்கள் அனைத்தும் ஆர்பிஐ போலீசார் உதவியுடன் தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டு பரிசோதித்து பிறகு அனுப்பப்படுகிறது. டெல்லிக்கு அனுப்பப்படும் பார்சல்கள் அனைத்தும் சுதந்திர தினம் முடிவடைந்த பிறகு ரயில் மூலமாக எடுத்துச் செல்லப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.