தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஐந்து சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி,
அரியலூர் – மணகெதி, திருச்சி – கல்லக்குடி, வேலூர் – வல்லம், திருவண்ணாமலை – இனம்கரியாந்தல், விழுப்புரம் – தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.  ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ஐந்து முதல் 20 ரூபாய் வரையும் மாதாந்திர பாஸ்கட்டணம் 100 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.