ஆந்திராவில் இரண்டு லாரிகள் மோதிய விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் இருந்து மீனவர்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி கிருஷ்ணா மாவட்டம் சீதனப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது கண்டெய்னர் லாரியை முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக கண்டெய்னர் லாரி மீனவர்களை ஏற்றி வந்த லாரி மீது மோதியது. இந்த கோர விபத்தில் ஆறு மீனவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.